உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

ஆஸி.க்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று இந்திய அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:31 am IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று இந்திய அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று இந்திய அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றிதே கிடையாது. இந்த இரு அணிகள் சொந்த மண்ணில் விளையாடியபோதும், சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோதும் ஒருநாள் தொடரை முழுமையாக வென்றதே கிடையாது. தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதனால், மூன்றாவது போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 27) ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணிக்குத் திரும்பியுள்ளனர். 

நாளை நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.