கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

டி20 கிரிக்கெட் அதிரடியான டெஸ்ட் வீரர்களை உருவாக்கினால்... என்ன சொல்கிறார் வீரேந்தர் சேவாக்?

டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக உருவாகினால் எதிர்காலத்தில்...

News image

வீரேந்தர் சேவாக் (கோப்புப் படம்)

Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:32 am

DIN

டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்கள் டெஸ்ட் வீரர்களாக உருவாகினால் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளைக் காண அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக், தில்லி பிரீமியர் லீக்கின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தில்லி பிரீமியர் லீக் அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இளைஞர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்துப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: டி20 போட்டிகளை நோக்கி இளைஞர்கள் கவரப்படுவதை நாம் குறைகூற முடியாது. டி20 போட்டிகள் அவர்களுக்கு பொருளாதார பயன்களை அளிக்கிறது. தற்போது இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஓவருக்கு 5 ரன்கள் என்ற ரன் ரேட்டில் ரன்கள் குவிக்கின்றனர். நாங்கள் டெஸ்ட் போட்டிகள் விளையாடும்போது, ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு 4 ரன்கள் எடுப்பார்கள்.

அதிரடியாக விளையாடினால் டெஸ்ட் போட்டிகளில் உங்களது அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். டெஸ்ட் போட்டியில் 270 பந்துகளில் 300 ரன்கள் குவித்தேன். இன்றைய இளைஞர்கள் அதே 270 பந்துகளில் 400 ரன்கள் குவிக்கக் கூட வாய்ப்புள்ளது. டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக உருவாகினால் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளைக் காண அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.