பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இன்று விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளார்.

வனிந்து ஹசரங்காவுக்குப் பதிலாக அணியில் ஜெஃப்ரி வாண்டர்சே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இலங்கை அணியில் மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா, துஷ்மந்தா சமீரா மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் அணியில் இல்லை. இந்த நிலையில், வனிந்து ஹசரங்கா தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளது இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.