தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

இளம் தடகள வீரர்களுக்கு நீரஜ் சோப்ரா கொடுத்த அறிவுரை!

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இளம் தடகள வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Neeraj chopra

நீரஜ் சோப்ரா - படம் | நீரஜ் சோப்ரா (எக்ஸ்)

Published On :

விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் இளம் தடகள வீரர்கள், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும் என ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியாவுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், இளம் தடகள வீரர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: ஒருவர் என்னை அவர்களது முன்மாதிரியாக (ரோல்மாடல்) எடுத்துக் கொள்கிறார்கள் என நினைக்கும்போது, அது சிறப்பான உணர்வைக் கொடுக்கிறது. விளையாட்டுத் துறையில் தங்களது பயணத்தைத் தொடங்குபவர்கள் அதிகம் வசதிகம் இல்லை என்பதை நினைத்து கவலைகொள்ளக் கூடாது. இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி முழு மனதுடன் பயணத்தை தொடங்க வேண்டும்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மிகவும் முக்கியம். நான் எனது பயணத்தை தொடங்கியபோது, பெரிய அளவிலான வசதிகள் எதுவும் இல்லை. இருப்பினும், நான் மகிழ்ச்சியாக பயிற்சி மேற்கொண்டேன். உங்களுக்கு எந்த அளவுக்கு வசதி இருக்கிறதோ அதிலிருந்தே உங்களது பயணத்தைத் தொடங்குங்கள். நீங்கள் மிகப் பெரிய வெற்றியாளராக மாறும் காலம் வரும் என்றார்.

ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.