இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!
/

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 11வது சுற்றில் குகேஷ் வெற்றி!

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், குகேஷ் 6 புள்ளிகளும், லிரென் 5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

News image

குகேஷ் - படம் | எக்ஸ்

Updated On :8 டிசம்பர் 2024, 7:01 pm IST

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11வது சுற்றில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்றார்.

நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடனான போட்டியில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய குகேஷ் 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், குகேஷ் 6 புள்ளிகளும் டிங் லிரென் 5 புள்ளிகளையும் பெற்றனர்.

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில், 10வது சுற்று சமனில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று 11வது சுற்றுப் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் குகேஷ் 6 புள்ளிகளும் லிரென் 5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

இதுவரை நடைபெற்றுள்ள 11 சுற்றுகளில் முதல் சுற்றில் டிங் லிரென் வென்ற நிலையில், 3வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். எஞ்சிய போட்டிகள் சமனில் முடிந்தன.

14 சுற்றுகள் கொண்ட உலக சாம்பியன்ஷிப் தொடரில், மீதமுள்ள 3 சுற்றுகள் சமனில் முடிந்தாலும் இந்திய வீரர் குகேஷ் உலக சாம்பியனாக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.