திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியிலிந்து ரோஹித் சர்மாவை நீக்க காரணம் இதுதான்: தலைமைப் பயிற்சியாளர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 4:29 pm IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம் துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணியை ஹார்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துவார் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பினார். மேலும், அந்த அணியின் கேப்டனாகவும் ஹார்திக் அறிவிக்கப்பட்டார். 

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார். 

Story image

இது தொடர்பாக அவர்  பேசியதாவது: ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன் அணிக்கு ஒரு வீரராகவே மீண்டும் வாங்கினோம். அதன்பின், அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மாவின் பங்களிப்பு ஒரு பேட்ஸ்மேனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேவைப்படுகிறது. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். கேப்டன் என்கிற பொறுப்பு இல்லையெனில் அவர் பேட்டிங்கில் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறினார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் மீது அழுத்தம் இருக்கும். ஆனால், ஐபிஎல் தொடரில் அவர் எந்தவித அழுத்தமுமின்றி மகிழ்ச்சியுடன் விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப் படுகிறார்கள். இதனை ஒரு கிரிக்கெட் முடிவு என அவர்கள் புரிந்துகொள்ள தவறுகிறார்கள். இந்த முடிவின் மூலம் ரோஹித் சர்மா தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.