கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அஸ்வின் திடீர் விலகல்; புதிய வீரர் சேர்ப்பு: ஐசிசி விதி சொல்வது என்ன?

அஸ்வின் திடீரென டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:47 am

அஸ்வின் திடீரென டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இருந்து சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் ரவிச்சந்திரன் திடீரென விலகி உள்ளாா். இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதின் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணி மீதமுள்ள ஆட்டத்தை 10 வீரா்களுடனே தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐசிசி விதியின்படி, வழக்கமாக வீரா் காயமடைந்தாலோ அல்லது கரோனா பாதிப்பு இருந்தால் தான் பதிலி வீரா்கள் அனுமதிக்கப்படுவா்.

அல்லது எதிரணியின் கேப்டன் சம்மதித்தால் மட்டுமே அஸ்வினைப் போல ஒரு ஆல் ரவுண்டரை அணியில் சேர்க்கலாம். அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்கலாம். அப்படி இல்லாதபோது ஃபீல்டிங் மட்டுமே செய்ய ஒரு வீரரை சேர்க்கலாம்.

இந்நிலையில் அஸ்வினுக்கு பதிலாக ஃபீல்டிங் மட்டுமே செய்ய தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.