டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்!

இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்.
டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்!
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று (பிப்ரவரி 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது அணியில் இடம்பெறவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இங்கிலாந்து திரும்புவதாகவும், மீதமுள்ள போட்டிகளில் அவர் அணியில் இடம்பெற மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்!
இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் அஸ்வினின் புதிய உலக சாதனை!

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தனிப்பட்ட காரணங்களுக்காக ரிஹான் அகமது உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்பவுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட வரமாட்டார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் சோயிப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரிஹான் அகமது 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com