நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தசைப்பிடிப்பால் தடுமாறினேன்...மனம் திறந்த கேமரூன் கிரீன்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்புடன் பேட் செய்த ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன்.

News image
Updated On :29 பிப்ரவரி 2024, 7:38 pm IST

தசைப்பிடிப்புடன் பேட்டிங் செய்ததாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 29) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக 103 ரன்களுடன் கேமரூன் கிரீன் களத்தில் உள்ளார்.

இந்த நிலையில், தசைப்பிடிப்பு ஏற்பட்ட பிறகு பேட்டிங் செய்யத் தடுமாறியதாக ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆட்டத்தின்போது எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. நான் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடினார். அவர் ரன்கள் குவிப்பதை எப்போதும் விரும்புபவர். ஆஸ்திரேலிய அணிக்கும் ரன்கள் தேவைப்பட்டன. மார்ஷ் குவித்த 40 ரன்கள் மிக முக்கியமானது. அவரது சிறப்பான ஆட்டத்தினால் தொடக்கத்தில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. அவர் அற்புதமாக விளையாடினார் என்றார்.

மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.