டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை குறித்துப் பேசிய ராகுல் டிராவிட்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் இருப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஜனவரி 2024, 8:36 pm IST

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் இருப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகனாக ஷிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் இருப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு பல காரணங்களுக்காக பல்வேறு வீரர்கள் அணியில் விளையாட வைக்கப்பட்டனர். ஆனால், டி20 உலகக் கோப்பை இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள இந்த நேரத்தில் இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இளம் வீரர்கள் தங்களது திறமையை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் வெளிப்படுத்தியுள்ளனர். வேறு எந்தெந்த துறைகளில் இந்திய அணியின் பலம் கூட்டப்பட வேண்டும்  என்பதில் கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. துரதிருஷ்டவசமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பிறகு அணி வீரர்கள் அனைவரும் ஒன்றாக செயல்படும் வாய்ப்பில்லை. ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் விளையாடும் விதத்தை கவனித்து அவர்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.