மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச லீக் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஜனவரி 19) முதல் தொடங்குகிறது. 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது சிறப்பான அனுபவம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் டி20 கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். டி20 லீக் போட்டிகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி விளங்குகிறது. சவாலை ஏற்றுக் கொள்வது என்பதுதான் முக்கியமானது. ஒரு அணியாக எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது எப்போதுமே ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இது போன்ற அழுத்தமான சூழல் வீரர்கள் சவால்களை ஏற்று சிறப்பாக செயல்பட உதவுகிறது என்றார்.