19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நேற்று (ஜனவரி 19) முதல் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்று வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரான ஆதர்ஷ் சிங் 76 ரன்கள் (6 பவுண்டரிகள்) எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக கேப்டன் உதய் சஹாரன் 64 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தார். வங்கதேசம் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரூஃப் மிரிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடி வருகிறது.