எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வங்கதேச அணியில் மீண்டும் விளையாடுகிறாரா தமிம் இக்பால்?

வங்கதேச அணிக்காக மீண்டும் விளையாடுவது குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் தமிம் இக்பால் பேசியுள்ளார்.

News image
Updated On :2 மார்ச் 2024, 7:58 pm IST

வங்கதேச அணிக்காக மீண்டும் விளையாடுவதாக இருந்தால் அதற்கேற்ற சரியான சூழல் அமைய வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் தமிம் இக்பால் பேசியுள்ளார்.

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமான தமிம் இக்பால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் தலையீட்டுக்குப் பிறகு அவரது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்.

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றபோதிலும் உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் அவர் விளையாடவில்லை. அவர் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். தற்போது டி20 லீக் போட்டிகளில் தமிம் இக்பால் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், வங்கதேச அணிக்காக மீண்டும் விளையாடுவதாக இருந்தால் அதற்கேற்ற சரியான சூழல் அமைய வேண்டும் என தமிம் இக்பால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது: நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். வங்கதேச அணியில் நான் மீண்டும் விளையாட வேண்டுமென்றால் பல விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நான் மீண்டும் வங்கதேச அணியில் விளையாடுவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. எனது கிரிக்கெட் பயணத்தில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவேன் என நினைக்கிறேன். அதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் நான் பேச வேண்டியிருக்கிறது. அவர்களிடம் பேசாமல் என்னால் இங்கு எதுவும் கூற முடியாது. அவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. அவர்களிடம் கண்டிப்பாக இது குறித்துப் பேசுவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.