இந்திய அணியில் நடுவரிசை ஆட்டக்காரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ரஜத் படிதாருக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (மார்ச் 7) தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் இடம்பிடித்த ரஜத் படிதார் அறிமுகப் போட்டிக்குப் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ரஜத் படிதாருக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துகொள்ள ரஜத் படிதாருக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாக இருக்கும். கடைசி டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் விளையாடுவார் எனத் தெரிகிறது. 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரஜத் படிதார், இறுதி வாய்ப்பாக கடைசி போட்டியிலும் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டாலும், சேர்க்கப்படாவிட்டாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. அணி நிர்வாகம் என்ன முடிவு எடுத்தாலும் அவர்களை நாம் விமர்சிக்க முடியாது என்றார்.