தொடர்ச்சியாக அணியில் விளையாடினால் உங்களது பந்துவீச்சின் மீதான உங்கள் நம்பிக்கை அதிரிக்கும் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீங்கள் தொடர்ச்சியாக அணியில் விளையாடினால் உங்களது பந்துவீச்சு மீது உங்களுக்கு அதிக நம்பிக்கை உண்டாகும். பந்துவீச்சு மீதான நம்பிக்கை மட்டுமின்றி ஆட்டம் குறித்த விழிப்புணர்வும் வந்துவிடும். உங்களது பந்துவீச்சை மெருகேற்றிக் கொள்ள அணியில் தொடர்ந்து விளையாடுவது அவசியம். பந்துவீச்சு என்பது உடல் தகுதியுடன் சம்பந்தப்பட்டது. உடலை நன்றாக வைத்துக் கொள்ள கடந்த 18 மாதங்களாக கடுமையாக உழைத்துள்ளேன். என்னுடைய உடல் தகுதியை மேம்படுத்திக் கொண்டதால் எனது பந்துவீச்சில் மாற்றங்களை கொண்டுவர முடிகிறது என்றார்.
கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் இந்த தர்மசாலா மைதானத்தில் குல்தீப் யாதவ் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.