தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்!

டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

Published On :

டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின். அந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசில்வுட் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளார்.

தர்மசாலா டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். இந்தத் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். ஜெய்ஸ்வால் 8-வது இடத்திலும், விராட் கோலி 9-வது இடத்திலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.