அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்!

டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

News image

ரவிச்சந்திரன் அஸ்வின்

Updated On :14 மார்ச் 2024, 7:35 pm IST

டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின். அந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசில்வுட் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளார்.

தர்மசாலா டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். இந்தத் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். ஜெய்ஸ்வால் 8-வது இடத்திலும், விராட் கோலி 9-வது இடத்திலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.