எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஐபிஎல் தொடரிலிருந்து ஹாரி ப்ரூக் விலகல்!

ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

News image

ஹாரி ப்ரூக் (கோப்புப்படம்)

Updated On :14 மார்ச் 2024, 4:04 pm IST

ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஹாரி ப்ரூக் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஹாரி ப்ரூக் பேசியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக நான் எடுத்துள்ள இந்த கடினமான முடிவை உறுதி செய்கிறேன். தில்லி கேப்பிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். அணியுடன் இணையும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். நான் விலகுவதற்கான தனிப்பட்ட காரணங்களை பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

பலரும் ஏன் என கேட்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதற்கான காரணத்தைக் கூறுகிறேன். கடந்த மாதம் எனது பாட்டி இறந்துவிட்டார். எனது சிறுவயதிலிருந்தே நான் அவரிடம்தான் வளர்ந்தேன். கிரிக்கெட் மீதான எனது ஆர்வத்துக்கு காரணமானவரும் அவர்தான். அவரது இழப்பு எனது குடும்பத்துக்கு பேரிழப்பு. இந்த நேரத்தில் எனது குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் இருக்க வேண்டியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.