நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

எதிர்பார்த்ததை விட விரைவில் குணடைந்த ரிஷப் பந்த்: தேசிய கிரிக்கெட் அகாடெமி

எதிர்பார்த்ததை விட ரிஷப் பந்த் முன்கூட்டியே குணமடைந்துள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பயிற்சியில் ஈடுபடும் ரிஷப் பந்த் - படம்: பிசிசிஐ, எக்ஸ்

Updated On :16 மார்ச் 2024, 4:04 pm IST

எதிர்பார்த்ததை விட ரிஷப் பந்த் முன்கூட்டியே குணமடைந்துள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் தற்போது முழுவதுமாக குணமடைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாட ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில், ரிஷப் பந்த் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே குணமடைந்துள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய கிரிக்கெட் அகாடெமி மருத்துவர்கள் கூறியதாவது: ரிஷப் பந்த்தின் மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை அவரை விரைவில் குணமடைய செய்துள்ளது. விரைவில் குணமடைவதற்காக அவர் அளித்த ஒத்துழைப்பு எங்களால் அவருக்கு 100 சதவிகித சிகிச்சையை அளிக்க முடிந்தது. ரிஷப் பந்த் இளம் வயதில் அதிக நேரம் உடற்பயிற்சி கூடத்தில் நேரத்தை செலவிட்டது அவர் விரைவில் குணமடைய உதவியது.

குணமடைந்து வரும் நிலையில் ஒரே மாதிரியான பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். ஒரே பயிற்சியாக இருப்பதை நினைத்து சலிப்படையாமல் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிருக்கும். இவை அனைத்தையும் ரிஷப் பந்த் தொடர்ச்சியாக செய்தார் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.