நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உலக சாதனை படைத்த அயர்லாந்து வீரர்!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் உலக சாதனை படைத்துள்ளார்.

News image

அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் - படம்: கிரிக்கெட் அயர்லாந்து

Updated On :16 மார்ச் 2024, 3:35 pm IST

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் உலக சாதனை படைத்துள்ளார்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 33 வயதான கிரிக்கெட் வீரர் பால் ஸ்டிரிலிங் 135 டி20 போட்டிகளில் விளையாடி 3463 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 125 சிக்ஸர்கள், 401 பவுண்டரிகள் உடன் 135.27 ஸ்டிரைக் ரேட்டுடன் இருக்கிறார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் உலக சாதனைப் படைத்துள்ளார் அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டி20களில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள்:

பால் ஸ்டிர்லிங் - 401

பாபர் அஸாம் - 395

விராட் கோலி - 361

ரோஹித் சர்மா - 359

டேவிட் வார்னர் - 320

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 149 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பெஞ்சமின் ஒயிட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.17) நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.