ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இலங்கை அணியின் பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் வீரர் நியமனம்!

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :16 மார்ச் 2024, 6:22 pm IST

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஆக்யூப் ஜாவத் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை வரை ஆக்யூப் ஜாவத் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்யூப் ஜாவத் பாகிஸ்தான் அணிக்காக 163 ஒருநாள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் ஜாவத் அங்கம் வகித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் அணி உலகக் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றபோது அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாவத் இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.