கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாபர் அசாம் (கோப்புப்படம்)
பாபர் அசாம் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் அண்மையில் நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அவர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாபர் அசாம் (கோப்புப்படம்)
எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்த நிலையில், கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

கேரி கிறிஸ்டன்
கேரி கிறிஸ்டன் படம் | கேரி கிறிஸ்டன் (எக்ஸ்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேரி கிறிஸ்டன் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர். அவர் அணியின் பயிற்சியாளராக இணைந்திருப்பது பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். உலகக் கோப்பைக்கான திட்டங்களை வகுப்பதில் அவர் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். உலகக் கோப்பைக்கான திட்டங்கள் மற்றும் யுக்திகள் குறித்து அணி நிர்வாகத்திடம் அவர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். எங்களிடம் வலைப்பயிற்சி குறித்த திட்டங்களும் உள்ளன என்றார்.

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com