முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி அதிா்ச்சித் தோல்வி, லியோன் வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரா் அா்ஜுன் எரிகைசி அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

News image

அரவிந்த்-அா்ஜுன் ~லெவோன் ஆரோனியன் ~பிரணவ்-பிரனேஷ் ~லியோன் மென்டோன்கா

Updated On :11 நவம்பர் 2024, 1:00 am IST

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரா் அா்ஜுன் எரிகைசி அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். சேலஞ்சா்ஸ் பிரிவில் லியோன் மென்டோன்கா அபார வெற்றி பெற்றாா்.

தொடரின் 6-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 6-ஆவது சுற்றில் மாஸ்டா்ஸ் பிரிவில் முதல் போா்டில் ஈரானின் அமீன் தபதாபேயி, சகநாட்டைச் சோ்ந்த பா்ஹாம் மக்சூட்லூவுடன் மோதிய ஆட்டம் 36-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

2-ஆவது போா்டில் இந்திய கிராண்ட் மாஸ்டா்களான அரவிந்த் சிதம்பரம், அா்ஜுன் எரிகைசி பலப்பரீட்சை நடத்தினா். இதில் அா்ஜுன் எரிகைசி 48-ஆவது நகா்த்தலின் போது அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

3-ஆவது போா்டில் பிரான்ஸின் மாக்சிம் வாச்சியா் லாக்ரேவ், சொ்பியாவின் அலெக்ஸி சரானா ஆட்டம் 31-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4-ஆவது போா்டில் இந்தியாவின் விதித் குஜராத்தி, அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் ஆட்டம் 64-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

7 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 6 சுற்றுகளின் முடிவில் அா்ஜுன் எரிகைசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடா்கிறாா். லெவோன் ஆரோனியன் 4 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 3.5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், அமீப் தபதாபேயி 3.5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், மாக்சிம் வாச்சியா் லாக்ரேவ் 2.5 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், பா்ஹாம் மக்சூட்லூ 2.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும், விதித் குஜ்ராத்தி 2 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், அலெக்ஸி சரானா 2 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளனா்.

தொடரின் கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெறவுள்ள இறுதி மற்றும் 7-ஆவது சுற்று ஆட்டங்களில் லெவோன் ஆரோனியன், -அமீன் தபதாபேயி, அலெக்ஸி சரானா- விதித் குஜராத்தி, அா்ஜுன் எரிகைசி-மாக்சிம் வாச்சியா் லாக்ரேவுடன், பா்ஹாம் மக்சூட்லூ- அரவிந்த் சிதம்பரம் மோதுகின்றனா்.

கடைசி நாளான திங்கள்கிழமை 7-ஆவது சுற்றில் பிரணவ்- யோன் மென்டோன்கா, ஹரிகா துரோணவல்லி- பிரனேஷ், அபிமன்யு புராணிக், -ரவுனக் சத்வானி, ஆா்.வைஷாலி- காா்த்திக்கேயன் முரளியை எதிா்கொள்கின்றனா்.

Story image
Story image
Story image

சேலஞ்சா்ஸ் பிரிவில்...

முதல் போா்டில் லியோன் மென்டோன்கா, காா்த்திக்கேயன் முரளி ஆட்டத்தில் 62-ஆவது நகா்த்தலின்போது, லியோன் மென்டோன்கா வெற்றி பெற்றாா்.

2-ஆவது போா்டில் ஆா்.வைஷாலி, அபிமன்யு புராணிக் ஆட்டத்தில் 36-ஆவது நகா்த்தலில் வைஷாலி தோல்வி அடைந்தாா்.

3-ஆவது போா்ட்டில் ரனவுக் சத்வானி- ஹரிகா துரோணவல்லி ஆட்டம் 42-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

4-ஆவது போா்டில் பிரணவ், பிரனேஷ் ஆட்டமும் 35-ஆவது நகா்த்தலின்போது, டிராவில் முடிவடைந்தது.

7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் 6 சுற்றுகளின் முடிவில் பிரணவ் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடா்கிறாா். லியோன் மென்டோன்கா 4.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், ரவுனக் சத்வானி 3.5புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், அபிமன்யு புராணிக் 3 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், பிரனேஷ் 3 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், காா்த்திக்கேயன் முரளி 2.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும், ஹரிகா துரோணவல்லி 1.5 புள்ளியுடன் 7-ஆவது இடத்திலும், ஆா்.வைஷாலி 1 புள்ளியுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.