புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமி

இந்தியாவை அழுத்தத்தில் வைத்திருந்தோம், ஆனால்...பென் ஸ்டோக்ஸ் பேட்டி!

இந்திய அணியை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தது மிகப் பெரிய விஷயம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 

Published On :9 பிப்ரவரி 2024, 7:11 pm IST

இந்திய அணியை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தது மிகப் பெரிய விஷயம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின்  பேஷ்பால் யுக்தி அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், இந்திய அணியை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தது மிகப் பெரிய விஷயம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக போட்டி முடிவடைந்த பிறகு பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இலக்கை துரத்திப் பிடிப்போம் என்ற முழுநம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதிக ரன்களை துரத்திப் பிடிக்க வேண்டும் என்கின்ற அழுத்தமான சூழலே இங்கிலாந்து அணியை பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட வைத்துள்ளது. இதுபோன்ற மிகப் பெரிய ஸ்கோரை துரத்தும்போது ஒரு அணியாகவும், தனி நபராகவும் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம். எங்களது பேட்டிங் திருப்திரமானதாகவே இருந்தது. பேட்ஸ்மேன்களின் பேட்டிங் அணுகுமுறைக்கு நான் எந்த அறிவுரையும் கூறப்போவதில்லை. இந்தியாவை நாங்கள் அதிகப்படியான அழுத்தத்தில் வைத்திருந்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமானதாக அமையவில்லை. இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அனுபவமிக்க வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டனர் என்றார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ராஜ்கோட்டில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.