தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விராட் கோலி தொடர்பாக தவறான தகவலைக் கூறி மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன்: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி தொடர்பாக தவறான தகவலை தெரிவித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 6:50 pm IST

விராட் கோலி தொடர்பாக தவறான தகவலை தெரிவித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை என இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்திருந்தார். தற்போது அவர் இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், விராட் கோலி தொடர்பாக தவறான தகவலை தெரிவித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Story image

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது: குடும்பத்துக்கு முக்கியத்தும் அளிப்பது முதன்மையாக இருக்க வேண்டும் என எனது யூடியூப் சேனலில் கூறியிருந்தேன். அந்த விடியோவில் விராட் கோலி குறித்து தவறான  தகவலைத் தெரிவித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன். நான் கூறியத் தகவல் உண்மை கிடையாது. விராட் கோலி விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அவர் எந்த காரணத்துக்காக விடுப்பு எடுத்திருந்தாலும், அவர் மீண்டும் வலிமையாக திரும்பி வருவார் என நம்புகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.