இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனக்கு ஊக்கமளிப்பதாக 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் நமன் திவாரி தெரிவித்துள்ளார்.
லக்னௌவைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நமன் திவாரி தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தனது யார்க்கர் மற்றும் வேகமான பந்துகளால் எதிரணியினரை அவர் திணற வைக்கிறார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை அவர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் கைப்பற்றிய 4 விக்கெட்டுகளும் அடங்கும்.
இதையும் படிக்க: முதல் டி20: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
இந்த நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனக்கு ஊக்கமளிப்பதாக 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் நமன் திவாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா எங்களுக்கு ஊக்கமளிப்பவராக இருக்கிறார். அவரது பந்துவீச்சு விடியோக்களை நான் அதிகம் பார்த்துள்ளேன். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் அவரை சிலமுறை சந்தித்துள்ளேன். அந்த சந்திப்பின்போது அவருடன் பந்துவீச்சு தொடர்பாக நிறைய பேசியுள்ளேன். அவர் பல விஷயங்களுக்கு எனக்கு விளக்கமளித்துள்ளார். பந்துவீச்சு தொடர்பாக அவர் கொடுத்த ஆலோசனைகள் எனக்கு மிக உதவிகரமாக இருக்கிறது. எப்படித் துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசவேண்டும் என்பது குறித்தும் எனக்கு ஆலோசனை கொடுத்தார். எனக்கு பிடித்த அனைத்துப் பந்துவீச்சாளர்களிடமிருந்தும் ஏதேனும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். சோயிப் அக்தரின் வேகப் பந்துவீச்சு, டெய்ல் ஸ்டெயினின் ஸ்விங், மிட்செல் ஸ்டார்க்கின் ஆக்ரோஷமான பந்துவீச்சு ஆகியவை பிடிக்கும் என்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 11) நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதென்ன அம்புபாச்சி மேளா? எங்கு விசேஷம்? முழு தகவல்!

வாட்ஸ்ஆப் வெப்பில் விடியோ கால், குரூப் வாய்ஸ் அம்சங்கள்!

மொஹரம் பண்டிகை: எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



