FOLLOW US

ON GOOGLE DISCOVER

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்...

News image

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | பேரவைத் தலைவர் - TN

Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:12 pm IST

பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு பேரவைத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து ஆதவ் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

கோவையில் மாணவன் அமுதன் கொலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்து அதன் மீது உரையாற்றினார்.

போதைப்பொருள் புழக்கம் குறித்து தகவல் கொடுத்த மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசினார்.

அப்போது திமுக மீது ஆதவ் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அவையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

அப்போது ஆதவ் அர்ஜுனா, "அங்கு 57 பேர்தான் இருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் எழுந்தால் உங்களால் பேசவே முடியாது" என்று கூறினார்.

இதற்கு பேரவைத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கடைசி வரிகள் மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது" என்று கூறினார்.

பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக அமைச்சர் ஆதவ் கூறினார்.

இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆதவ் பேசுகையில், "100 நாள்களில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க முடியாது. 2020க்கு முன் போதைப்பொருள் கலாசாரம் தமிழகத்தில் இல்லை. போதைப்பொருள் புழக்கத்தை உருவாக்கியதே திமுகதான்" என்று கடுமையாக விமர்சித்தார்.

Summary

Assembly Speaker objects to Aadhav Arjunas remarks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.