முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியிலிருந்து இவரும் விலகுகிறாரா?

தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 4:23 pm IST

தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை 2  போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும்  1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. முதல் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. 

இந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் தசைப்பிடிப்பு மற்றும் முதுகு வலி இருப்பதாகக் கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.