விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பேஸ்பால் ஆட்டத்தை ஜோ ரூட் கைவிட வேண்டும்: முன்னாள் கேப்டன் விமர்சனம்!

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஜோ ரூட்டை  விமர்சித்துள்ளார். 

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 4:03 pm IST


இந்தியாவுக்கு எதிரான தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கிறது இங்கிலாந்து அணி. பென் ஸ்டோக்ஸ் மெக்குல்லம் அணியினர் பேஸ்பால் என்ற தாக்கத்தை உலக கிரிக்கெட்டில் பேசு பொருளாக மாற்றியுள்ளார்கள். 

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஜோ ரூட்-இன் பேஸ்பால் பாணியை விமர்சித்து பேசியுள்ளார். ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: 

முதல் பந்திலிருந்தே 5ஆவது கியரில் விளையாடுகிறார்கள். சிலர் அப்படி விளையாடுவது எனக்கு பிரச்னையில்லை. அதேமாதிரி விளையாடுவது சரியில்லை. ஜோ ரூட் இதை மறக்க வேண்டும். ஜோ ரூட் அவரது பாணியிலேயே விளையாடி 10,000 ரன்கள் அடித்திருக்கிறார். அவருக்கு பேஸ்பால் ஆட்டம் தேவையில்லை. 

இங்கிலாந்து அணியின் நிர்வாகத்தில் யாராவது ஒருவர் ஜோ ரூட்டிடம் ‘தயவுசெய்து உங்களது இயல்பிலேயே விளையாடுங்கள்’ எனக் கூற வேண்டும். ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடும் ஜோ ரூட் இப்படி மோசமாக ஆடுவதை பார்க்க வேதனையாக இருக்கிறது. ஸ்பின்னருக்கு எதிராக இங்கிலாந்து உருவாக்கிய சிறந்த பேட்டர்களில் ஒருவர் ரூட் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.