சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கொஞ்ச நாள்களிலா பிரசித் கிருஷ்ணாவுக்கு இப்படி நடக்க வேண்டும்!

ரஞ்சி போட்டியின்போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

ரஞ்சி போட்டியின்போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ரஞ்சிக் கோப்பை போட்டிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ரஞ்சிக் கோப்பையில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரை அவர் தவற விடுகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மிகவும் சிறப்பானதாக அமையவில்லை. இரண்டு போட்டிகளில் அவர் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். அவரது எகானமி 4.64 ஆக இருந்தது. 

பிரசித் கிருஷ்ணாவுக்கான காயம் சரியாக 4-லிருந்து 6 வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.