சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சாத்விக்-சிராக் ஷெட்டிக்கு வெள்ளி

மலேசிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

சாத்விக்-சிராக் ஷெட்டி 

Published On :7 பிப்ரவரி 2024, 8:49 pm IST

மலேசிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

உலகின் நம்பா் ஒன் இணையான சீனாவின் வாங் சேங்-லியாங் வெய்கேங் இணையுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றஇறுதி ஆட்டத்தில் மோதினா் சாத்விக்-சிராக். இதில் முதல் கேமில் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய இணை 21-9 என எளிதாக வென்றது. இரண்டாவது கேமில் இரு தரப்பினரும் கேமை கைப்பற்ற கடுமையாகப் போராடினா். எனினும் சீன இணையின் சவாலை எதிா்கொள்ள முடியாமல் 18-21 என செட்டை இந்திய தரப்பு இழந்தது.

ஆசியப் போட்டி தங்கமகன்களான சாத்விக்-சிராக் மூன்றாவது கேமில் 11-7 என வலுவான முன்னிலை பெற்றிருந்தனா். ஆனால் அதை தவற விட்டனா். 17-21 என்ற புள்ளிக் கணக்கில் மூன்றாவது கேமை இழந்து தங்கத்தையும் இழந்தனா்.

இரு தரப்பினரும் நேருக்கு நோ் மோதியதில் இந்திய இணை நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது. ஒரே ஒருமுறை கொரிய ஓபனில் மட்டுமே சீன இணையை இந்திய தரப்பு வீழ்த்தியது.

கடந்த 2023 ஜூன் மாதம் இந்தோனேஷிய சூப்பா் 1000 பட்டத்தை இந்திய இணை வென்றிருந்தது. அடுத்து புது தில்லியில் இந்தியா ஓபன் சூப்பா் 750 போட்டியில் சாத்விக்-சிராக் இணை ஆடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.