பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது அழுத்தத்தை கொடுக்கிறது: நிக்கோலஸ் பூரன்

மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஜனவரி 2024, 6:44 pm IST

மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச லீக் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஜனவரி 19)  முதல் தொடங்குகிறது. 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது சிறப்பான அனுபவம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் டி20 கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். டி20 லீக் போட்டிகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி விளங்குகிறது. சவாலை ஏற்றுக் கொள்வது என்பதுதான் முக்கியமானது. ஒரு அணியாக எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது எப்போதுமே ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இது போன்ற அழுத்தமான சூழல் வீரர்கள் சவால்களை ஏற்று சிறப்பாக செயல்பட உதவுகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.