தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது அழுத்தத்தை கொடுக்கிறது: நிக்கோலஸ் பூரன்

மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஜனவரி 2024, 1:14 pm

DIN

மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச லீக் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஜனவரி 19)  முதல் தொடங்குகிறது. 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடுவது மிகவும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது சிறப்பான அனுபவம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் டி20 கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். டி20 லீக் போட்டிகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி விளங்குகிறது. சவாலை ஏற்றுக் கொள்வது என்பதுதான் முக்கியமானது. ஒரு அணியாக எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது எப்போதுமே ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இது போன்ற அழுத்தமான சூழல் வீரர்கள் சவால்களை ஏற்று சிறப்பாக செயல்பட உதவுகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.