ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என நினைக்கவில்லை: இங்கிலாந்து வீரர்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 ஜனவரி 2024, 4:29 pm IST

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று (ஜனவரி 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி அதிரடியாக 80 ரன்கள் சேர்த்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். 

Story image

இது தொடர்பாக முதல் நாள்  ஆட்டம் முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் போதுமான அளவுக்கு ரன்கள் எத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆடுகளம் முதல் நாளிலேயே சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவானதாக இருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எப்போதும் இதுபோன்று அதிரடியாக விளையாடுவதில்லை. அவர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள் என்றால், ஆடுகளத்தின் தன்மை அடுத்தடுத்த நாள்களில் சிறிது மோசமாக மாறப்போகிறது என நினைக்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.