ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில், புதிதாக நாய் வடிவிலான கேமரா இயந்திரம் (ரோபோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் இந்த இயந்திர நாய் விளையாடும் விடியோவை ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
அந்த விடியோவில், நியூசிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் டேனி மோரிசன், இந்த இயந்திர நாயை அறிமுகம் செய்து வைக்கிறார். மிகுந்த திகைப்புடனும், அச்சம் கலந்த மகிழ்ச்சி உடனும் இயந்திர நாயுடன் வீரர்கள் பேசுவது, விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதில், வீரர்கள் செய்யும் சைகளைகளை செய்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதோடு மட்டுமின்றி, அவர்கள் எதிர்பாராத அசைவுகளையும் செய்து ஆச்சரியபப்டுத்துகிறது.
கிரிக்கெட் திடல் முழுவதும் வலம் வரும் இந்த இயந்திர நாயின் முகத்திலும் முதுகிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வீரர்களின் செயல்கள் அனைத்தும் நாயின் பார்வையிலும் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீரர்கள் பேசிக்கொண்டும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் இயந்திர நாய், அதனையும் படம் பிடித்துள்ளது.
ஐபிஎல் ஒளிபரப்பு குழுமத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாய் வடிவிலான இயந்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் ஐபிஎல் கேட்டுள்ளது. இதில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | தில்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஷர் படேலுக்கு அபராதம்!
ðð¼ð¹ð± ð¼ð»! ðªð²'ðð² ð® ð»ð²ð ðð£ð ð³ð®ðºð¶ð¹ð ðºð²ðºð¯ð²ð¿ ð¶ð» ðð¼ðð» ð
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
It can walk, run, jump, and bring you a 'heart(y)' smile ð©â¤ï¸
And...A whole new vision ð¥
Meet the newest member of the #TATAIPL Broadcast family ð - By @jigsactin
P.S: Can you help us in⦠pic.twitter.com/jlPS928MwV
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டாய கண்காணிப்பு கேமரா நடைமுறை: 70 மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

7000 mAh பேட்டரி! ஓப்போ ரெனோ 16, ரெனோ 16 சி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சிவகாசியில் நாய்களுக்கு தடுப்பூசி

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரத்தின் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.300 உயா்வு
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



