பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

தில்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு அபராதம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image

அக்‌ஷர் படேல் - படம் | AP

Updated On :14 ஏப்ரல் 2025, 7:54 pm IST

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.

இந்த போட்டியில் மெதுவாக பந்துவீசியதன் காரணத்தினால் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு பிசிசிஐ தரப்பில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டாடா ஐபிஎல் தொடரின் 29-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் விளையாடியது. இந்தப் போட்டியில் தில்லி அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், தில்லி அணிக்கு விதி 2.22-ன் படி ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மெதுவாக பந்துவீசிய காரணத்துக்காக முதல் முறையாக தில்லி கேபிடல்ஸுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.