27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை; பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறுவதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை என பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

News image

எம்.எஸ்.தோனி

Updated On :14 ஏப்ரல் 2025, 6:34 pm IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை என பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது அந்த அணிக்கு மிகப் பெரிய கவலையாக மாறியுள்ளது. காயம் காரணமாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். தோனி மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். ஷிவம் துபேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஃபிளெமிங் கூறியதென்ன?

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னௌவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில், சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்துவிடும்.

முக்கியமான போட்டியில் விளையாடவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை என பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸை கேப்டனாக வழிநடத்தும் பொறுப்பை எம்.எஸ்.தோனி ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் அணியை வழிநடத்துவது மிகவும் முக்கியம். ஆனால், அவரிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை. அவருடன் இணைந்து அணி வீரர்கள் கடின உழைப்பை வழங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஏற்கனவே இதுபோன்ற சூழல்களில் இருந்துள்ளோம். இந்த சூழலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்ப நிறைய ஆற்றல் தேவைப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.