27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன்: கருண் நாயர்

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மனதளவில் தயாராக இருந்ததாக தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் கருண் நாயர் பேசியுள்ளார்.

News image

கருண் நாயர் - படம் | ஐபிஎல்

Updated On :14 ஏப்ரல் 2025, 4:48 pm IST

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மனதளவில் தயாராக இருந்ததாகவும், தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்ததாகவும் தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் கருண் நாயர் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்தினார். தில்லி கேபிடல்ஸின் முதல் நான்கு போட்டிகளில் விளையாடாமலிருந்த கருண் நாயர், மும்பைக்கு எதிரான போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இருப்பினும், தில்லி அணியால் வெற்றியை வசமாக்க முடியவில்லை.

வாய்ப்புக்காக காத்திருந்தேன்

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மனதளவில் தயாராக இருந்ததாகவும், தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்ததாகவும் தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் கருண் நாயர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், நான் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். நான் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளேன். அதனால், போட்டிகள் எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியும். என்னுள் நான் கூறிக்கொண்டது என்னவென்றால், முதலில் சில பந்துகளை பொறுமையாக எதிர்கொண்டு, அதற்கு பின் அதிரடியாக விளையாடிக் கொள்ளலாம் எனக் கூறிக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக அனைத்தும் நன்றாக அமைந்தது. நான் நன்றாக விளையாடியது மகிழ்ச்சியளித்தது.

ஃபாஃப் டு பிளெஸ்ஸி போன்ற முக்கியமான வீரர் அணியில் இல்லை. அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் வெளியில் அமர்ந்திருக்கும் என்னைப் போன்ற பேட்ஸ்மேன்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதனால், மனதளவில் நான் தயாராகவே இருந்தேன். எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன். எனக்கான வாய்ப்பு கிடைத்தபோது நம்பிக்கை அதிகரித்தது. வாய்ப்பினை பயன்படுத்தி நன்றாக விளையாடினேன் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.