தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதி டி20 போட்டி நிறைவடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தெ.ஆ. அணி முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் தோற்று ஒன்றில் வெற்றியைப் பெற்றதால் போட்டித்தொடர் 1 - 1 என்கிற சமநிலையில் இருந்தது.
இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த தெ. ஆ. அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, அதிரடியாக விளாசிய டெவால்ட் பிரேவிஸ் 53 (26 பந்துகளில்) ரன்கள் எடுத்தார்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடனும் தொடரை வெல்லும் முனைப்புடனும் பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி முதல் விக்கெட்டுக்கு பொறுமையாக ரன்களைச் சேர்க்க, முதலில் களமிறங்கி மிட்சல் மார்சல் 54 ரன்களில் ஆட்டமிழக்க, மெல்ல ஆட்டம் தெ.ஆ. பக்கம் மாறத் துவங்கியது.
இருந்தும் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தால் இறுதியாக கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆட்டம் இரு பக்கத்திற்கும் சாதகமாக மாற, மேக்ஸ்வெல் பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்த வெற்றியால், தென்னாப்பிரிக்க அணியை 2 - 1 என்கிற கணக்கில் வீழ்த்தி ஆஸி. தொடரைக் கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் 36 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகவும் டிம் டேவிட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க: பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!
Summary
australia won the t20 tournament against south africa
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்கட்ட பயிற்சி நிறைவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |

ஆப்கான்-பாகிஸ்தான் அமைதிப் பேச்சு: இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


