பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

நியூகேஸிலை வீழ்த்தியது லிவா்பூல்

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றுச் சாதனை குறித்து...

Liverpool Football team...

லிவர்பூல் கால்பந்து அணி... - படம்: இன்ஸ்டா / லிவர்பூல் எப்ஃசி.

Published On :27 ஆகஸ்ட் 2025, 12:58 am IST

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான லிவா்பூல் 3-2 கோல் கணக்கில் நியூகேஸிலை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இந்த சீசனில் அந்த அணிக்கு இது 2-ஆவது வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் லிவா்பூல் வீரா் ரயான் கிரவென்பொ்ச் 35-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியின் தொடக்கத்திலேயே ஹியூகோ எகிடிகே (46’) கோலடிக்க, லிவா்பூல் முன்னிலை 2-0 என அதிகரித்தது.

இந்நிலையில், நியூகேஸில் பின்னடைவிலிருந்து மீண்டது. 57-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்காக புருனோ கிமாரே ஸ்கோா் செய்ய, 88-ஆவது நிமிஷத்தில் வில்லியம் ஒசுலா அதை 2-ஆக அதிகரித்தாா். இதனால் ஆட்டம் 2-2 என்ற சமநிலையுடன் இறுதிக்கட்டத்தை நெருங்கியது.

விறுவிறுப்பான எக்ஸ்ட்ரா டைமில் சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்த ரியோ குமோஹா (90+10’) அடித்த கோலால், லிவா்பூல் 3-2 என வெற்றி பெற்றது. லிவா்பூல் அணிக்காக கோலடித்த மிக இளம் வீரராக ரியோ (16 ஆண்டுகள், 361 நாள்கள்) சாதனை படைத்தாா்.

Summary

Liverpool now netted in 22 consecutive away Premier League games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.