
கஜகஸ்தான் அணி ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.
1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு கஜகஸ்தான் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் ஆக.29 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட கஜகஸ்தான் தேர்வாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு (பிகார்) முதல்முறையாக வந்தடைந்தனர்.
ஹிரோஷிமாவில் 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் கஜகஸ்தான் ஐந்தாம் இடம் பிடித்தது. அதே ஆண்டு ஆசிய போட்டிகளில் 6ஆவது இடம் பிடித்து அசத்தியது.
தற்போதைக்கு, உலக ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் கஜகஸ்தான் 81-ஆவது இடத்தில் இருக்கிறது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, கஜகஸ்தான், ஜப்பான், சீனா ஆகிய அணிகள் உள்ளன.
ஆக.29ஆம் தேதி கஜகஸ்தான் தனது முதல் போட்டியில் ஜப்பானையும் அடுத்ததாக ஆக.31-இல் சீனாவையும் எதிர்கொள்கிறது.
இந்தியாவுடன் செப்.1ஆம் தேதியும் மோதவிருக்கிறது. இந்த அணியின் கேப்டன் யெர்கெபுலான் டியுசெபெகோவ் கூறியதாவது:
ஹாக்கியின் இதயமாக இருக்கும் இந்தியாவுக்கு முதல்முறையாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு சிறப்பான வாய்ப்பாக கருதுகிறோம்
எங்களது அணி மிகவும் இளமையானது. கற்றுக்கொண்ட வளரவேண்டுமென ஆர்வமாக இருக்கிறோம்.
கஜகஸ்தானைப் பெருமைப்பட வைக்க கடினமாக போராடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.