மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

கால்பந்து வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து...

The body of slain soccer player Mario Pineida lies on the floor at a butcher shop in Guayaquil, Ecuador,

கொலை செய்யப்பட்ட வீரரின் உடலுக்கு அருகில் காவல்துறையினர். - படம்: ஏபி

Published On :

ஈக்வடாரில் இருக்கும் பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் டிஃபென்டர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் (33 வயது) கடை வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அதே இடத்தில் உயிரிழந்திருக்கும் அடையாளம் காணாத மற்றுமொரு உடலைக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட வீரர் யார்?

மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் சர்வதேச அளவில் பார்சிலோனா டி குவாயாகில் என்று அழைக்கப்படும் பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் டிஃபெண்டராக இருக்கிறார்.

இவர் தனது கால்பந்து பயணத்தை இன்டிபென்டியென்ட் டெல் வாலே கிளப்பில் (2010- 2015) தொடங்கினார். அடுத்து 2016- 2025 வரை பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் ஒப்பந்தம் ஆனார்.

இதற்கிடையில் லோன் அடிப்படையில் ப்ளூமினென்ஸ் எஃப்சி மற்றும் கிளப் டிபார்டிவோவிலும் விளையாடியுள்ளார்.

இவரது கொலைக்கு கிளப் அணியினரும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள்.

ஈக்வடாரில் அதிகரிக்கும் கொலைகள்...

காவல்துறையினர் இந்தக் கொலை குறித்து ஏதும் தகவலைக் கூறாமல் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளார்.

ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டில் 7,063ஆக இருந்த இதன் எண்ணிக்கை 2023-இல் 8,248-ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சில இயக்கங்கள் இந்தக் கொலைச் சம்பவங்களை ஏற்படுத்தி வருவதாக அந்நாட்டின் அதிபர் டேனியல் நொபோவா கூறியுள்ளார்.

Summary

Ecuadorian police said on Wednesday that Mario Pineida, a 33-year-old Barcelona de Guayaquil defender, was shot dead in an apparent attack as violence escalates in the Andean nation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.