சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் புதிய தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144-வது சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் கூட்டத்தில் 10-வது தலைவராக கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவருக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுக்குள் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 41 வயதான ஜிம்பாப்வே விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த கிறிஸ்டி கோவென்ட்ரி வெற்றி பெற்றார்.
இதையும் படிக்க: ஐபிஎல் 2025: 17 சீசன்களாக நடுவர்; இந்த முறை புதிய அவதாரம்!
2013 ஆம் ஆண்டில் முதன்முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பாக், மீண்டும் 2021 ஆம் ஆண்டில் தலைவரானார். அவருக்குப் பின்னர் கிறிஸ்டி கோவென்ட்ரி தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 23 ஆம் தேதி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றப்போகும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் கிறிஸ்டி.
ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவரான கிறிஸ்டி, 2033 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் பதவி வகிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாரம்பரிய ஆணையத்தின் தலைவராக நம்பிராஜன் நியமனம்!
தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக லதா குப்தா நியமனம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!

கரூரின் விளையாட்டு அரங்கம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



