ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ஐபிஎல் 2025: 17 சீசன்களாக நடுவர்; இந்த முறை புதிய அவதாரம்!

கடந்த 17 ஐபிஎல் சீசன்களாக நடுவராக செயல்பட்டு வந்த அனில் சௌதரி இந்த முறை புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

News image
Updated On :20 மார்ச் 2025, 7:38 pm IST

கடந்த 17 ஐபிஎல் சீசன்களாக நடுவராக செயல்பட்டு வந்த அனில் சௌதரி இந்த முறை புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அனைத்து அணிகளும் வலுவாக இருப்பதால், இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

வர்ணனையாளராக அனில் சௌதரி

நாளை மறுநாள் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், கடந்த 17 சீசன்களாக நடுவராக செயல்பட்டு வந்த அனில் சௌதரி, இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்படவுள்ளார்.

ரஞ்சி கோப்பையில் கேரளம் மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் நடுவராக செயல்பட்ட அனில் சௌதரி, அந்தப் போட்டியுடன் நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் சர்வதேசப் போட்டியில் நடுவராக செயல்பட்டார்.

கடந்த வாரம் தனது 60-வது வயதில் அடியெடுத்து வைத்த அனில் சௌதரி இதுவரை 12 டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.