ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
வெங்கடேஷ் ஐயர் கூறியதென்ன?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் அண்மையில் நியமிக்கப்பட்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை வெங்கடேஷ் ஐயர் நினைவு கூர்ந்துள்ளார்.

வெங்கடேஷ் ஐயர் - படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நான் இடம்பெறுவது குறித்து செய்திகள் பேசப்பட்டு வந்தன. அப்போது, நிகழ்காலத்தில் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்தாது, உலகக் கோப்பைத் தொடர் குறித்து யோசிக்கத் தொடங்கிவிட்டேன். கடைசியில், நான் இரண்டையும் தவறவிட்டு விட்டேன். அந்த அனுபவம் என்னுடைய வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது. நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அதிலிருந்து கற்றுக்கொண்டேன்.
அதன் பின், காயம் காரணமாக 6-8 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. அந்த இடைவெளி எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. மிகப் பெரிய விஷயத்தை அடைய வேண்டும் என்பதற்காக நிகழ்காலத்தில் உள்ள விஷயங்களை நாம் பாராட்ட மறந்துவிடுகிறோம். இவை என்னுடைய வார்த்தைகள் அல்ல. இதனை ஷாருக்கான் என்னிடம் கூறினார் என்றார்.
இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ஒருபோதும் நினைக்கவில்லை: அஜிங்க்யா ரஹானே

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



