மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மழை காரணமாக பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
மகளிருக்காக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன், இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியாவும் தென்னாப்பிரிக்க அணிகளும் மோதுகின்றன.
ஆஸி. உடன் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய அணி கோப்பையை வெல்வார்கள் என்றே பலரும் கருதுகின்றனர்.
இறுதிப்போட்டியானது இன்று மும்பை படேல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தற்போது அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.