லிவர்பூல் அணியின் வீரர் தியாகோ ஜோடாவின் சகோதரர் ஆண்ட்ரே சில்வாவுக்குப் (25 வயது) பதிலாக எல்சே வீரர் ஆண்ட்ரே டி சில்வா (30 வயது) புகைப்படத்தை அஞ்சலி விடியோவில் ரியல் மாட்ரிட் பயன்படுத்தியது பேசுபொருளானது.
உயிருடன் இருக்கும் வீரரின் புகைப்படத்தை பயன்படுத்திய இந்தத் தவறுக்கு ரியல் மாட்ரிட் அணி வருத்தம் தெரிவித்துள்ளது.
லிவர்பூல் வீரர் தியாகோ ஜோடா, அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா இருவரும் ஸ்பெயின் கார் விபத்தில் கடந்த ஜூலையில் இறந்தனர்.
ரியல் மாட்ரிட் அணி இந்த ஆண்ட்ரே சில்வா புகைப்படத்திற்குப் பதிலாக எல்சே அணியின் ஆண்ட்ரே டி சில்வாவின் புகைப்படத்தினை தனது அஞ்சலி விடியோவில் தவறுதலாக பயன்படுத்தியது.
இது குறித்து ரியல் மாட்ரி அணியின் தலைவர் ஃபுளோரெண்டினோ பெரேஜ் மனிதத் தவறு எனக் கூறியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
அஞ்சலி விடியோவில் தவறு நடந்துவிட்டது. அது ஒரு மனிதப் பிழை. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
ரியல் மாட்ரிட் அணி எல்சே உடனான போட்டியில் 2-2 என சமனில் முடிந்தது.
கார் விபத்தில் இறந்தபோதே இந்தப் பெயர் குழப்பத்தினால் பலரும் உயிருடன் இருக்கும் ஆண்ட்ரே டி சில்வாவின் மனைவிக்கு அஞ்சலி செய்திகள் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
Real Madrid have apologized to Elche and their player André da Silva.
— Football Factly (@FootballFactly) November 23, 2025
The club mistakenly used his image instead of that of André Silva, brother of Diogo Jota in a tribute video.
ð¤¯ð¤¯ð¤¯ pic.twitter.com/YGiDPeGFWZ
Summary
Real Madrid has apologized after showing a photo of the wrong player in a video tribute to Diogo Jota and his brother Andre Silva, who died in a car crash in Spain in July.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







