திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சுல்தான் ஜோஹா் ஹாக்கி: இந்தியாவுக்கு 2-வது வெற்றி

ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :13 அக்டோபர் 2025, 4:41 am IST

மலேசியாவில் நடைபெறும் சுல்தான் ஆஃப் ஜோஹா் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக அா்ஷ்தீப் சிங் 2-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, பி.பி. சுனில் 15-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா். தொடா்ந்து அராய்ஜீத் சிங் ஹண்டால் 26-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, முதல் பாதியை இந்தியா 3-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் நியூஸிலாந்துக்காக கஸ் நெல்சன் 41-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். மறுபுறம் ரோமன் குமுா் 47-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் கோல் எண்ணிக்கையை 4-ஆக அதிகரித்தாா். கடைசியாக நியூஸிலாந்தின் அய்டான் மேக்ஸ் 52-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

எஞ்சிய நேரத்தில் அந்த அணியின் கோல் முயற்சிகளுக்கு பலன் இல்லாமல் போக, இறுதியில் இந்தியா 4-2 கோல் கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்றிருக்கும் இந்தியா, ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கான முனைப்புடன் அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.