சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

லிவர்பூல் கால்பந்து வீரர் முகமது சாலா நிகழ்த்திய சாதனை குறித்து...

Liverpool's Mohamed Salah celebrates after scoring his side's second goal during the Champions League Anfield stadium in Liverpool, England,

லிவர்பூல் கால்பந்து வீரர் முகமது சாலா. - படம்: ஏபி

Published On :18 செப்டம்பர் 2025, 1:04 pm IST

சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூல் கால்பந்து வீரரரும் எகிப்திய அரசன் என்று அழைக்கப்படும் முகமது சாலா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அத்லெடிகோ மாட்ரிட் உடனான போட்டியில் லிவர்பூல் அணி 3-2 என த்ரில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக்கில் தனது முதல் போட்டியில் லிவர்பூல் அணி, ஜூலியன் அல்வராஸ் இல்லாத அத்லெடிகோ மாட்ரிட் உடன் மோதியது.

இந்தப் போட்டியில் முகமது சாலா 4-ஆவது நிமிஷத்தில் ஓர் அசிஸ்ட்டும் 6-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தும் அசத்தினார்.

இதன்மூலம், சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இங்கிலாந்து நாட்டின் கிளப் அணிகளில் 6 நிமிஷங்களில் ஓர் அசிஸ்ட், ஒரு கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனைக்கு முகமது சாலா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

அத்லெடிகோ மாட்ரிட் சார்பில் 45+3, 81-ஆவது நிமிஷங்களில் மார்கோஸ் லொரேன்டா கோல் அடித்து 2-2 என சமன்படுத்த, 90+2-ஆவது நிமிஷத்தில் வான் டிஜிக் கோல் அடித்து வெற்றிப் பெறச் செய்தார்.

Summary

Mohamed Salah stands alone in history! Liverpool's Egyptian King breaks unique record during dramatic Champions League win against Atletico Madrid.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.