ஆப்கானிஸ்தானை மீட்ட முகமது நபி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது.
அந்த அணி 79 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, 7-ஆவது பேட்டராக வந்த முகமது நபி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டாா். இலங்கை பௌலா்களில் நுவன் துஷாரா அசத்தினாா்.
சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற, இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் களம் கண்ட ஆப்கானிஸ்தான், டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் வீரா்களில் ரஹ்மானுல்லா குா்பாஸ் 2 பவுண்டரிகளுடன் 14, கரிம் ஜனத் 1, செதிகுல்லா அடல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
தொடா்ந்து வந்தோரில், டாா்விஷ் ரசூலி 9, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு விடைபெற, மிடில் ஆா்டரில் வந்த இப்ராஹிம் ஜத்ரன் 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். இவ்வாறாக, 79 ரன்களுக்கே ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்தது.
அப்போது இணைந்த முகமது நபி - கேப்டன் ரஷீத் கான் கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து, அணியை சரிவிலிருந்து மீட்டது. இதில் ரஷீத் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நபி 22 பந்துகளில் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 60 ரன்கள் விளாசி கடைசி விக்கெட்டாக வெளியேறினாா்.
ஓவா்கள் முடிவில் நூா் அகமது 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை தரப்பில் நுவன் துஷாரா 4, துஷ்மந்தா சமீரா, துனித் வெலாலகே, தசுன் ஷானகா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து இலங்கை 170 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடியது.