டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

யுஇஎல் தொடக்கம்: ஆயுதங்கள் வைத்திருந்த 102 ரோமா கால்பந்து ரசிகர்கள் கைது!

ரோமா கால்பந்து ரசிகர்கள் கைது செய்யப்பட்டது குறித்து...

News image

வெற்றிக் கொண்டாட்டத்தில் ரோமா அணியின் ரசிகர்கள். - படம்: ஏபி

Updated On :24 செப்டம்பர் 2025, 8:20 pm IST

ஐரோப்பா லீக்கின் தொடக்க போட்டியாக நடைபெறும் நிஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ரோமா கால்பந்து ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கலவரத்தில் ஈடுபட்டதால் இந்தக் கைது நடவடிக்கை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்பான நிஸ் அணிக்கும் இத்தாலி நாட்டின் கிளப்பான ரோமா அணிக்கும் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஐரோப்பியன் லீக்கில் மோதுகிறது.

இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு காவல்துறையுடன் ரோமா ஆதரவாளர்கள் பொருள்களை எரிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

லஜியோ அணி ரோமாவின் பரம எதிரியாக கருதப்படுகிறது. இவர்களுக்கு கடந்த செப்.21ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ரோமா அணி 1-0 என வென்றது.

ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிய ரோமா அணியினர்.

ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடிய ரோமா அணியினர். - படம்: ஏபி

இதனை ரோமா அணியினர் ரசிகர்களுடன் சேர்ந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில், 200 காவல்துறையினர் நிஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுமென முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், கையில் ஆயுதங்கள் வைத்திருந்த 102 ரோமா அணியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அனைத்து ஆயுதங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் பொதுச் சொத்துகள் எந்தவிதமான சோதாரமில்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளன.

போட்டி நடைபெறும் புதன்கிழமை அன்று 400 காவல்துறை பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

மூன்றாண்டுக்கு முன்பாக நிஸ் அணிக்கும் ஜெர்மனியின் கோலோக்னே கிளப்புக்கும் இடையிலான போட்டியின்போது 32 பேருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

More than 100 Roma supporters have been arrested in Nice ahead of Wednesday's Europa League match between the two teams.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.