48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

இனவெறிக்கு உள்ளானதாக வினிசியஸ் புகார்..! ரியல் மாட்ரிட் வெற்றியும் சர்ச்சையும்!

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இனவெறிக்கு உள்ளான ரியல் மாட்ரிட் வீரர் குறித்து...

News image

வினிசியஸ் ஜூனியர். - படம்: ஏபி

Updated On :18 பிப்ரவரி 2026, 12:31 pm

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் இனவெறிக்கு உள்ளாகியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பென்ஃபிகா உடனான பிளே ஆப்ஸ் ஆட்டத்தில் வினிசியஸ் ஜூனியருக்கு நிகழ்ந்த இந்தக் கொடூரமான செயலுக்கு கால்பந்து உலகில் சர்ச்சை வெடித்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக்கில் பென்ஃபிகாவும் ரியல் மாட்ரிட் அணியும் முதல் கட்ட பிளே ஆப்ஸில் மோதின. இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் 1-0 என வென்றது.

இந்தப் போட்டியில் பென்ஃபிகா அணியின் வீரர் ஜியான்லுகா பிரெஸ்டியானி ரியல் மாட்ரிட் அணியின் வீரர் வினிசியஸ் ஜூனியரை குரங்கு எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் புகாரினால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பென்ஃபிகா வீரர் தான் அப்படி எதுவும் கூறவில்லை எனக் கூறினார். அந்த அணியும் எக்ஸில் விடியோ வெளியிட்டு, “இவ்வளவு தூரத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட் வீரர்களுக்கு என்ன கேட்டது?” எனப் பதிவிட்டுள்ளது.

இதே போட்டியில் ஆர்ஜென்டீன வீரர் ஓடமென்டி தன்னிடம் உலகக் கோப்பை இருப்பதாகவும் வினிசியஸிடம் என்ன இருக்கிறதெனவும் கூறியது வைரலானது.

இந்தப் போட்டியில் வினிசியஸ் 50ஆவது நிமிஷத்தில் சிறப்பான ஒரு கோல் அடித்ததும் அவரது ஆபாசமான கொண்டாட்டத்துக்கு மஞ்சள் கார்டு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரணத்தினால் பெஃபிகா அணியினர் அவர் மீது தண்ணீர் பாட்டிகளை வீசி எறிந்தனர்.

வினிசியஸ் மீது தண்ணீர் பாட்டிகளை வீசி எறிந்த பெஃபிகா அணியினர்.

வினிசியஸ் மீது தண்ணீர் பாட்டிகளை வீசி எறிந்த பெஃபிகா அணியினர். - ஏபி

முந்தைய 2024 பேலந்தோர் விருதிலும் தன்னை இன ரீதியாகப் பாகுபாடு காட்டியதாலே விருது மறுக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி பேலந்தோர் விருது நிகழ்வைப் புறக்கணித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் சுமாராக விளையாடிய வினிசியஸ் இந்த சீசனில் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார்.

Summary

Champions League: Vinicius Junior says he was racially insulted in Real Madrid win.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.